Social Icons

Dienstag, 26. April 2016

நெடுந்தீவு அரவிந்தின் பிறந்தநாள் பரிசு

மழைக்கால இராத்திரி
தாழ்வாரங்ளில் வடியும்
ஒற்றை மழைத்துளிகளை
ஏந்தியபடி உன் உணர்வுகள் மெய் சிலிர்க்கும்
ஓர் முத்தத்திற்கு
அன்றுதான்
பழக்கபட்டிருப்பாய்.


இந்த நடுநிசியின் கொஞ்சல்களின்
பெருவெளியில்
என் மார்புமுடிக்கு
உன் உதடுகள் ஒத்தடம்
கொடுத்து
வெட்கபட்டுக்கொண்டாய்.


உன் தனிமத்தில்
வண்டல் வண்டலாய்
பெருக்கெடுக்கும்
அழுதுதீர்த்த அபூர்வ 
நேசங்களின் பழங்கதை
பேசி முடித்திருந்த
மூன்றாம் ஜாமத்தில்
நம் பிரிவுகளுக்கான
ஏற்பாடும் நிறைவேற்றப்பட்டிருந்தது




ஆக்கம் நெடுந்தீவு அரவிந்
.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates