Social Icons

Sonntag, 20. März 2016

நெடுந்தீவு தனுவின் நாளைய மீட்பர்..!
















தெருமுனைகளை
கடந்ததென்
மனவோட்டத்தில்
லயித்து போகிறது
கற்பனை..
பொய்களின்
குறுக்குவெட்டில்
மரிக்கின்றன
பாவப்பூச்சிகள்...
மேய்ப்பனின்
நிலவொளிக்காக
கரு சுமக்கிறாள்
புனிதா...
புனிதா..!
புஸ்பங்களை
புறந்தள்ளிய
புருவக்காரி...
பாடுகளை
முள்முடியாக்கிய
பண்பட்ட
பாவக்காரி...
குருத்துவமே
மரித்துவிடும்
பொதுநிலையினரின்
வாக்குறுதிகளால்....
புனிதா..!
புனிதை
கல்வாரி பாதையிலே
குடிலோடு...
அலகையின்
ரத்தக் குடிப்பில்
உறைந்துபோன
பனிக்கட்டி...
பொய்களின்
குறுக்கு வெட்டில்
உடைகின்றது
மெய்விவாகம்...
தொலைந்த
ஜெபமாலையில்
தேடப்படுகின்றன
ஆன்மாக்கள்...
புனிதா..!
சுமக்கிறாள்
நாளைய மீட்பரை
இன்றைய கருவில்...

.ஆக்கம் 










Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates