Social Icons

Donnerstag, 31. März 2016

சுதர்சன் எழுதிய யாரும் இல்லாத விடியாத




















அறை கூவல்!
விடியும் என்று
காத்திருந்தேன்
நிலமும் ஏங்குகிறது
என்னோடு சேர்ந்து
விடியலுக்காய்
விட்டு விட்டு போக
மனம் விடுதில்லை
நடுக்கம் உடலுறுப்புக்கு தானே

மனம் என்பது
பிரம்மையின்
வடிவில்லா
உணர்வே என்பதால்
கூக்குரல் இட்டு
அழைக்க ஆளில்லை
ஆனாலும்
இரவு நாய்களின்
அலறல்கள்
அருகில் தான் கேட்கிறது

சென்று பார்க்க
கால் நடுங்குகிறது
அறைகூவல்
கூவுகிறேன்
யாரும் இல்லாத
விடியாத
வனாந்தரத்தில்


ஆக்கம் சுதர்சன்


             

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates