Social Icons

Sonntag, 27. März 2016

கவிஞை ரதிமோகனின் பெண்ணின்றி வாழ்வேது.















வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்பவள்
வாழ்நாள் பூரா உன் கூட வருபவள்
விழியிலே அன்பை சொல்லி
வழி நடத்திச் செல்பவள் பெண்..


இல்லத்தை கோயிலாக்குவாள்
குத்துவிளக்காக ஒளி தருவாள்
அன்பெனும் மழையாலே நினை
நீராட்டி தாலாட்டி தூங்க வைப்பாள்..

அன்பிற்கு மட்டும்அடிமையாகிடுவாள்
ஆள நினைத்தால் சீறும் புலியாவாள்
பொறுமைக்கு இலக்கணமும் அவளே
பொறுமையை சோதித்தால்
பொசுக்கிடும் மின்சாரமும் அவளே..

பெண்ணோடு மெய்யென வாழ்ந்திடு
மெய்கொண்டு உயிரோடு கலந்திடு
கையோடு கை சேர்த்து நடந்திடு
கண்கலங்காமல் அவளை காத்திடு

காதல் கொண்ட தேவதையும் அவளே
கனி மொழி பேசும் த த்தையும் அவளே
பெண்ணின்றி உன் வாழ்வு சுவைத்திடுமா
கண்களாக அவளை நினைத்திடு
கடவுள் தந்த வரம் நீ என்றிடு
அவளின்றி இன்பமான வாழ்வேதுனக்கு...
ஆக்கம்: ரதிமோகன்

  கவிஞை ரதிமோகன்

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates