Social Icons

Mittwoch, 20. April 2016

கவிஞை நகுலா சிவநாதனின் வசந்தத்தின் துளிர்ப்புகள்

அந்த வசந்தகாலம் வளமாய் வந்தது
சுகந்தம் தந்தது சுமைகள் குறைந்தது
இன்பம் துளிர்த்தது இயற்கை மலர்ந்தது
துன்பம் பறந்தது துயரம் விலகியது

புத்தம் புதிய காலை உதயம்
பூக்கள் யாவும் விரிவின் விழிம்பில்
பாக்கள் புனையும் பாவலன் வனைவும்
நாட்கள் செல்ல நன்றாய் துளிர்க்கும்

வசந்தம் வந்தால் வாழ்வு செழிக்கும்
வளரம் மரங்கள் இதழ்கள் விரிக்கும்
மொட்டும் மலரும் இலையும் துளிர்க்கும்
மோனை இல்லா முகாரி இசைக்கும்

வண்டும் வரும் வகையாய் பூவும் விரியும்
கன்றும் பிறக்கும் களிப்போடு பாலும் சொரியும்
திருவிழாவும் வரும் திருப்பணியும் தொடரும்
பெருவிழாவாய் இளவேனில் பெயர்சொல்ல வசந்தம் வரும்

வசந்தத்தின் துளிர்ப்பில் வாழ்க்கையும் மலரும்
சுகந்தத்தின் நுகர்வில் சுகங்கள் புரியும்

ஆக்கம் கவிஞை 
நகுலா சிவநாதனின்



Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates