Social Icons

Freitag, 8. April 2016

கவிஞர்சுபாரஞ்சனின் பாடும் பறவைகள் .....















ஒளிக் கீற்றை ஊடறுத்து
உயரப் பறந்து
உலகத்தை அளக்கும்
உல்லாசப் பறவைகள்
இசைக்கின்ற
காதல் கீதம்....
உள்ளமெலாம் உட்புகுந்து
பாய்ந்தோடி
புத்துணர்வு பிறக்க
ஏகாந்தப் பெருவெளியின்
பிரபஞ்ச நாதம் போல்
ஒலிக்கிறது..........
புலம்பல்களை எல்லாம்
விட்டு விட்டு
புலன்களை விரித்து
என் பொருள் பொதிந்த
பாடல்களை கேள் என்று
கையசைத்து அழைக்கிறது...

ஆக்கம் கவிஞர்சுபாரஞ்சன்

1

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments system

 
Blogger Templates